×

விதைப்பரிசோதனை செய்வது அவசியம்: விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை

 

ஆண்டிபட்டி, பிப். 3: விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் விதையின் தரத்தை உறுதி செய்வதற்கு விதைப்பரிசோதனை அவசியம் என வேளாண்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஒரு விதையின் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் மற்றும் பிற ரக கலப்பு ஆகியவற்றை மிகத் துல்லியமாகவும், அதன் வம்சாவழியினை உறுதிசெய்யும் விதமாகவும் பரிசோதனை முடிவுகள் இருக்கும். மேலும் விதைப்பரிசோதனை செய்வதால் ஒரு விதையின் திறனை அறிந்து விதையளவு நிர்ணயம் செய்யப்படுகிறது.

குறிப்பிட்டுள்ள விதைத் தரமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். புறத்தூய்மை சோதனை செய்வதால் தூய வகைகள், களை விதைகள்பிற ரக விதைகள் மற்றும் உயிர்ப்பற்ற பொருட்களின் அளவினை அறிய முடியும். பிற ரக விதைகள் கலந்துள்ளனவா என கண்காணிப்பதன் மூலம் ரகத்தின் இனத்தூய்மையை பாதுகாக்கலாம். முளைப்புத்திறன் என்பது விதையானது உயிரும், வீரியமும் கொண்டு இயங்குவதை காட்டுவது ஆகும்.

நல்ல முளைப்புத்திறன் கொண்டு விதைக்கப்படும் விதையின் மூலம் நிறைய பயிர் எண்ணிக்கை கிடைக்கும். மேலும், பயிர்கள் செழித்து வளரும். விதையின் ஈரப்பதம் உள்ளதைப் பொறுத்தே அவ்விதையின் ஆயுள் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் அலுவலரையோ அல்லது வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post விதைப்பரிசோதனை செய்வது அவசியம்: விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Antipatti ,Dinakaran ,
× RELATED ஆண்டிப்பட்டி மேகமலை அருவியில் திடீர்...